ASHOKA THE GREAT - WYTZE KEUNING (முத்துக் குளிக்க வாரியளா…?)

ASHOKA THE GREAT By Wytze Keuning நான்காயிரத்து நானூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு நாட்டில் கிமு 300களில் வாழ்ந்த ஒரு மன்னனைப் பற்றி, அந்த நாட்டிற்குச் செல்லாமல், அந்த நாட்டின் மொழி தெரியாமல், அந்த கலாசாரத் தகவல்கள் போதிய அளவு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் உழைத்து, மூன்று பாகங்கள் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, உலகப் போரின் நடுவே, தன் நாட்டை ஆக்ரமித்திருக்கும் எதிரி நாட்டவரிடம் அனுமதி வாங்கிப் போராடி பதிப்பித்திட வேண்டுமென்றால் ஒருவரிடம் எத்தகைய அர்ப்பணிப்பும் எழுதப் படும் நாயகன் மீது எத்தகைய ஈடுபாடும் இருக்கவேண்டும்? அப்படிப்பட்ட ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் எழுதப்பட்டது தான் ‘ASHOKA THE GREAT’. நெதர்லாந்து நாட்டின் Groningen என்ற ஊரில் வாழ்ந்த Wytze Keuning எனும் பள்ளி ஆசிரியரால் வரலாற்றுப் புனைவாக எழுதப்பட்டது . Wytze Keuning 1937 ல் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த Wytze Keuning அதை விடுத்து, கிடைக்கும் சிறு ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு, தன்னை முழுமையாக இந்தப் புத்தகம் எழுதுவதில் ஈடுபடுத்திக்கொண்டார். 1930 களில் ஒரு நெதர்லாந்து நா...