இடுகைகள்

மழைச்சாமி

படம்
இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு வறண்ட கிராமத்தின் ஒரு காய்ந்த பகல் பொழுதில், பிரசவித்த களைப்பில் ஒரு தாயும், பிறந்த களைப்பில் ஒரு ஆண் சிசுவும் உறங்க ஆரம்பித்தனர். மழை பெய்யத் தொடங்கியது. ‘என் மவன் பொறந்த நேரம் நல்ல நேரமய்யா’, என பிள்ளையைப் பெற்றவனும், ‘மூணுக்கப்புறம் இதாவது பையனாப் பொறந்ததே’, என பெற்றவளின் மாமியார்க்கிழவியும் சந்தோஷித்தனர். அதன் பின் அந்தக் கிராமத்தில் தினமும் மழை பெய்தது. நாள் தவறாமல், வாரம் தவறாமல், மாதம் தவறாமல், வருடம் தவறாமல் நான்கு வருடங்களாய் சத்தமில்லாமல், சலனமில்லாமல், அமைதியாய், அளவாய், நிச்சயமாய் இரவிலும், எப்போதேனும் பகலிலும் பெய்தது. சட்டென அந்தக் கிராமம் செழித்துப்போனது. அவன் பிறந்த நேரம் என அந்தக் கிராமம் அவனைக் கொண்டாடியது. அவனுக்கென வைத்த பெயர் மறந்து, ‘யப்பா, சாமி, அப்பு’, என அடைமொழி சொல்லியே அவன் அழைக்கப்பட்டான். நான்கு வயதாகியும் வாய் திறந்து வார்த்தை பேசாததால் அவனை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வேண்டிக்கொள்ளச் சென்றாள் அவனைப் பெற்றவள். அன்று அந்தக் கிராமத்தில் மழை பெய்யவில்லை. மதுரையில் பெய்தது. ‘என்னய்யா, உன் மவன் மழையையும் கூடவே க...

கொலைக் களம்

படம்
  "டேய், டேய், டேய், வேணாம்டா....ப்ளீஸ் டா... சொன்னாக் கேளுடா..." கெஞ்சலும், கோபமும், அழுகையும், கையாலாகாத்தனமும் கலந்து ஒலித்தது அமுதாவின் குரல். "போக்கா....உனக்கு வேற வேலை இல்ல...இதப் பத்திப் பேசாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்... முடிஞ்சு போன விஷயம்... இன்னும் அதையே பிடிச்சு தொங்கிகிட்டு இருக்க...." எந்தக் கலவையும் இல்லாமல் எரிச்சல் மட்டுமே மொத்தம் சேர்ந்து பதிலாய் தெறித்தது அவள் தம்பி வாசுவின் வார்த்தைகளில். "இன்னும் ரெஜிஸ்டிரேஷன் ஆகலைலடா... இன்னும் டைம் இருக்குடா...ப்ளீஸ்டா...கொஞ்சம் யோசிடா..." மீண்டும் அமுதாவின் கெஞ்சல். "நல்லா யோசிச்சுத்தான் நான் முடிவு பண்ணியிருக்கேன்... பன்னெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன்... அப்பாவும் அம்மாவும் இருந்தப்போ இந்தப் பேச்சையே எடுக்க விடல. அப்பா போனப்புறம் அம்மா அதுக்கு மேல...என்னவோ அவங்க உசுரே அதுல தான் இருந்த மாதிரி அதைப்பத்தி பேசறதா இருந்தா வீட்டுக்கே வராதன்னு சொல்லிட்டாங்க...பெத்த மகன்னு கூடப் பாக்காம... நானும் பொறுத்துக்கிட்டேன் எப்பிடியும் என் கைக்கு ஒரு நாள் வரத்தான போகுதுன்னு...இத்தனை வருஷமா யோசிக்...

WOW! What Driving!

படம்
  சில திரைப்படங்களில் வரும் சில காட்சிகள் என்றும் நம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருப்பவை. அப்படிப்பட்ட காட்சிகளில் நிச்சயம் முதலிடம் பெறுவது ஆக்க்ஷன் காட்சிகளும், கார் சேஸ் காட்சிகளும் தான். இந்தப் பதிவு கார் சேஸ் காட்சிகளைப் பற்றியது. இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் தரவரிசைப்படி அல்ல, வெளிவந்த வருடங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.  1.      BULLIT (1968) ஹாலிவுட் படங்களில் சேஸ் ஸீன்களின் முன்னோடி இது தான். ‘Frank Bullit’ என்ற நேர்மையான போலீஸ் டிடெக்டிவைப் பற்றிய கதை. ஸ்டூடியோக்களில் செட் போட்டே அநேகமாய் எல்லாவற்றையும் படமாக்கிய காலம் அது. படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான Steve McQueen, San Francisco- வின் மேயரிடம் பேசி நகரின் போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, விமான நிலையம், முக்கியமாகத் தெருக்களை, படப்பிடிப்பிற்குத் திறந்துவிடச் சொல்லி சம்மதம் வாங்கினார். அந்த முடிவும் நம்பிக்கையும் கார் சேஸ் ஸீனில் அப்பட்டமாய் தெரிகின்றன. வசனமோ, இசையோ (முதல் சில நிமிடங்கள் தவிர) இல்லாத, சுமார் 12-நிமிட துரத்தல், ஒளிந்து விளையாடும் சிறுவ...

எழுத்து

படம்
  இன்னும் எழுதப்படாதவைக் காத்திருப்பது எந்தப் பேனாவுக்காக? ---------

சேவலும் கடலையும் - ரஷ்ய நாட்டுப்புறக் கதை

படம்
                                     Valery Carrick தொகுத்து Nevill Forbesஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நியூ யார்க்கின் Frederick A. Stokes பதிப்பாளர்களால் 1914, 1920 வெளியிடப்பட்ட ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதை. படங்களும் அந்தப் புத்தகத்தில் இருப்பவையே.                                         சேவல் ஒன்று ஒரு நாள் வீட்டின் பின் இருந்த மண்ணைக் கிளறிக்கொண்டிருந்த போது ஒரு கடலையைக் கண்டது.                                    கண்டதும் அதை விழுங்கப் பார்த்தது. ஆனால் விழுங்கும் போது கடலை சேவலின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. கடலை தொண்டையில் சிக்கியதால் மூச்சு விடமுடியாமல் தரையில் கால்களை நீட்டி ஆடாமல் அசையாமல் விழுந்து கிடந்தது....

காலத்தின் ஊடாக ஓடும் கோடு

படம்
காலம் : கிமு 1776 இடம் : பாபிலோன் “ கிமு 1776- ல் பாபிலோன் தான் உலகின் மிகப் பெரிய நகரம் . ஒரு மில்லியன் குடிமக்களுக்கும் மேலாகக் கொண்டு , பாபிலோனியப் பேரரசு தான் அநேகமாக உலகின் மிகப் பெரும் பேரரசாகத் திகழ்ந்தது . இன்றைய ஈராக் , சிரியா மற்றும் ஈரானின் பெரும் பகுதிகளை அந்த அரசு தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது . அரசன் ஹமுராபி இன்றைக்கும் அறியப்படும் பாபிலோனியாவின் பேரரசன் . அவனுடைய புகழுக்கு முக்கிய காரணம் அவனுடைய பெயரைத் தாங்கி நிற்கும் 'Code of Hammurabi' என்ற ஆவணம் . இந்த ஆவணம் சட்டங்களையும் நீதித்துறையின் முடிவுகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைத்த ஓர் ஆவணம் . ஹமுராபியை ஒரு நீதி பிறழாத அரசனாக முன் வைப்பதும் , பாபிலோனிய பேரரசு முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒரேவிதமான சட்ட விதிகளை எடுத்துரைப்பதும் , வருங்கால சந்ததியினருக்கு நீதி என்றால் என்ன என்பதை எடுத்துரைப்பதும் , நீதிமானான ஓர் அரசன் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதும் தான் 'Code of Hammurabi' யின் நோக்கம் . அதில்...