இடுகைகள்

நாவாய் ஒப்பந்தம் - I

படம்
  என் திருமணத்திற்கு அடுத்த ஜுலை மாதம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, மூன்று கேஸுகளில் ஷெர்லக் ஹோம்ஸுடன் இணைந்து அவருடைய துப்பறியும் முறைகளை கூடவே இருந்து பார்த்ததில். என்னுடைய நோட்ஸுகளில் இவற்றை ‘இரண்டாம் கறையின் மர்மம்’ , ‘நாவாய் ஒப்பந்தம்’ மற்றும் ‘சோர்ந்து போன கேப்டன்’ என்ற தலைப்புகளின் கீழ் குறித்து வைத்திருந்தேன். இதில் முதல் கேஸ் அரச குடும்பத்தின் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதாய் இருப்பதால் இதை பற்றிப் பேசுவதற்கு அடுத்த நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும். அந்தக் கேஸில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெர்லக் ஹோம்ஸின் திறமையைப் பார்த்து வியந்ததற்கு சாட்சியம் போல், அவர் பாரீஸ் போலீசுக்கு அந்தக் கேஸை விளக்கிச் சொல்லியதின் வார்த்தை மாறா ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றிப் பேச முடியாததினால், பட்டியலில் அடுத்து இருக்கும் கேஸிற்குப் போகிறேன். இந்தக் கேஸின் கிளையன்ட் என்னுடைய பள்ளித் தோழன் என்பதாலும், தேசத்தின் பாதுகாப்பு குறித்ததாகவும் இருப்பதாலும் இது கொஞ்சம் தனித் தன்மை கொண்டதாகிறது. என்னுடைய பள்ளி நாட்களில் என்னுடன் படித்தவன் பெர்சி பெல்ப்ஸ் (Percy Phelps). என் வயதை ...

யானை டாக்டர் - ஜெயமோகன் (முத்துக் குளிக்க வாரியளா?)

படம்
  வேண்டும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் பிரிக்கப்படாமலேயே வரிசை கட்டி நிற்க நேர்வது எல்லாப் புத்தகப்பிரியர்களுக்கும் நடக்கும் ஒன்று என்று தோன்றுகிறது. நம்முடைய அலமாரியில், நாமே பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்களாகவே இருந்தாலும் கூட, அவற்றை வாசிப்பதற்குக் கூட நமக்கென்று ஒரு நேரமும் அந்தப் புத்தகத்திடமிருந்து கிட்டத்தட்ட ஒரு அனுமதியும் கிடைக்கப்பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இரண்டு நாட்கள் முன்பு வரை அந்த நேரமும் அனுமதியும் கிடைக்காமல் இருந்த புத்தகம் 'யானை டாக்டர்'. டாக்டர். கிருஷ்ணமூர்த்தி யைப் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கதை என்று ஐந்து வார்த்தைகளிலும் கூட விவரித்து(?) விடலாம் இந்தப் புத்தகத்தை. இந்தச் சிறுகதை முதலில் எப்போது எங்கே வெளிவந்தது என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. தனி நூலாக தன்னறம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ள போதும் என் கைகளில் வந்து சேர்ந்தது இயல்வாகை பதிப்பகத்தின் வெளியீடு. ஒரு புத்தகத்தில் இருக்கும் காப்புரிமை, வெளியான வருடம் ஆகிய வெளியீட்டுத் தகவல்கள் எவற்றையும் காண முடியவில்லை. இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு ...

நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் - சிறுகதை தொகுப்பு

படம்
  காடு, காதல், கார், கதை, கிராமம், மரம், மனிதன்… இவைகளைப் பற்றி …  இப்படியெல்லாம் கூட இருக்குமா? இப்படியும் இருந்தால்? விடைகள் கிடைக்குமா உள்ளிருக்கும் பக்கங்களில்? இல்லை மேலும் வினாக்கள் வீசிச்செல்லுமா வார்த்தைகள்? நுழைந்துதான் பாருங்களேன்!  நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் சிறுகதை தொகுப்பு Paperback on Amazon  நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் சிறுகதை தொகுப்பு  Kindle edition on Amazon 

“வீடு தைக்கிறீங்களா, வீடு?” (வீடு series – III)

படம்
  நீங்கள் எதையும் தவறாக வாசித்துவிடவில்லை. 'வீடு தைக்கிறீங்களா?' என்று சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். செங்கல், மணல், சிமிண்ட், கல், கான்க்ரீட், மண், மரம், உலோகம் என்ற மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டைக் 'கட்டலாம்' . துணியைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டை 'தைக்க' த் தானே வேண்டும்? அப்படித் 'தைக்கப்படும்' வீடுகளுக்குப் பெயர் 'யர்ட்' (yurt) அல்லது 'கெர்' (ger) . ருஷ்யப் பெயரான 'யர்ட்' -ம் மங்கோலியப் பெயரான 'கெர்'- ம் குறிப்பது வேறெதுவுமில்லை, கூடாரத்தைத் தான். ' அடச்சே! இதுக்குத் தானா இந்தப் பாடு? கூடாரத்தைப் போய் வீடுன்னு எப்படி சொல்ல முடியும்?' என்று நினைத்தால், தொடர்ந்து வாசியுங்கள்.  ஈரானின் மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பித்தளைக் கிண்ணம் ஒன்றில் இந்த யர்ட் -ன் படம் இருந்துள்ளது. ‘அதனாலென்ன?’ என்று கேட்கிறீர்களா? அந்தக் கிண்ணம் செய்யப்பட்டதாகக் கணிக்கப்பட்டது 600 கிமு ஆண்டு. ஹெரோடோட்டஸ் (Herodotus) என்னும் கிரேக்க வரலாற்றாளர் 440 கிமு ஆண்டிலேயே சில குறிப்பிட்ட இனத்தவர்கள் இந்த வகை வசிப...

மண்ணோடு மண்ணாக … (வீடு series – II)

படம்
  உலகின் மொத்த carbon dioxide வெளிப்பாட்டில் 39 சதவிகித பங்களிப்பும், உலகின் மொத்த எரிசக்தி உபயோகத்தில் 36 சதவிகித பங்கும் கொண்டு, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் சீர்கேட்டிற்கும் பெரும் பங்காற்றுவது கட்டுமானத் துறை (construction industry) என்று World Green Building Council- ன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும், தொலை தூரத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பருவநிலை மாற்றமும் அதன் அச்சுறுத்தும் தாக்கங்களும், என்றோ, எங்கோ, எப்போதோ என்றில்லாமல் இன்று, இங்கு, இப்போது என்று மனிதகுலம் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. பெருகிவரும் ஜனத்திரளுக்கும் அதிகரித்துவரும் நகரமயமாதலுக்கும் ஈடு கொடுக்கும் வகையில், கட்டிடங்களின் எண்ணிக்கைகளும் அளவுகளும் இனியும் கூடிக்கொண்டுதான் செல்லுமேயன்றிக் குறைவதற்கு வாய்ப்பில்லை. அப்படி அவைகள் குறையவேண்டும் என்று நினைத்தால் அது மனிதனின் அடிப்படைத் தேவையான வசிப்பிடத்தைத் தட்டிப் பறிப்பதாகி விடும். வாழ்விடங்களும் வேண்டும், அதே நேரம் அவை மாசுபடுத்தாத 'green' கட்டிடங்களாகவும் இருக்கவேண்டும் என்ற இரட்டைத் தேவையைப் பூர்த்த...

பாலு மகேந்திராவின் ‘வீடு’ (‘வீடு’ series I)

படம்
  "சமர்ப்பணம் உலகெங்கிலுமுள்ள வீடற்ற மக்களுக்கு" என்று பாலு மகேந்திரா 1988ல் 'வீடு' திரைப்படத்தை சமர்பித்ததில் இருந்து இன்று வரை எத்தனையோ மாற்றங்களை, வளர்ச்சிகளை உலகம் கண்டிருந்தாலும், 'சொந்த வீடு' என்பது இன்னும் கோடானுகோடி மக்களுக்கு எட்டாத கனவாகவே இருக்கிறது. லேட்டஸ்ட் தரவுகளின் படி தற்போதைய வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் - உலகம் முழுவதும். சாஃப்டவேர் வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் மார்ஜின் தொகையைக் கட்டி, உட்கார்ந்த இடத்தில் வீட்டுக் கடன் வாங்கி, வாங்கும் ஐந்திலக்க/ஆறிலக்க சம்பளத்தில் EMI பிடித்தமாகிவிட (இதிலும் சங்கடங்கள் இல்லாமலில்லை, ஆனாலும் அவை சுதாவின் சங்கடங்களுக்கு சற்று சளைத்தவை தான்) , 'வீடு வாங்க வேண்டும்' என்று நினைத்த இரண்டாம் மாதத்தில் சொந்த பிளாட்டில் குடியேறிவிடும் இன்றைய தலைமுறையினருக்கு, 'வீடு' திரைப்படம் புரியாத, மிகைப்படுத்தப்பட்ட melodramaவாகத் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனாலும் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னதான மத்திய நடுத்தர வர்க்க (‘middle’ middle class) நிதர்சனம் அது தான். ஒரு வீட்டடி ம...

எங்கே செல்லும் இந்தப் பாதை? (சிறுகதை)

படம்
  ' எங்கே செல்லும் இந்தப் பாதை ? யாரோ யாரோ அறிவார் ?'   பாடல் வரிகள் அவள் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன லூப்பில் . சற்று ஏற்றமாக செல்லத் தொடங்கிய அந்த மலைப்பாதையில் நடப்பதற்கு சற்று சிரமமாகத் தான் இருந்தது . இதுவரை மலை வாசஸ்தலங்களுக்கு சென்றதில்லையாதலால் எல்லாமே அவளுக்குப் புதிதாக இருந்தது . கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரியும் பச்சையும் எப்போதும் காற்றில் கலந்திருக்கும் குளிரும் மனதிற்கும் உடலிற்கும் இதமாய் இருந்தபோதிலும் அவள் ஏற்கனவே எடுத்துவிட்டிருந்த முடிவை அவைகள் மாற்றவில்லை . சட்டென்று வீசிச்சென்றச் சில்லிட்டக் காற்று அவள் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி அவளை லேசாய் நடுங்கச் செய்தது . ' ஜாக்கெட்டைப் போட்டு வந்திருக்கலாமோ ?' என்று அவளுக்குத் தோன்றிய சிந்தனை அவளைப் புன்னகைக்கவைத்தது . ' சாகப்போகிறவள் குளிராமல் சாக வேண்டுமாம் ! ' என்று அவளையே அவள் கேலி செய்துகொண்டு நடந்தாள் . எடுத்து வைத்த அடுத்த அடியில் சட்டென்று விரிந்தது அவளை மூச்சுவிட மறக்கச் செய்த மலைக்காட்சி . ...