ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துப்பறியும் கொஞ்சம் வித்தியாசமான துப்பறியும் குறுநாவல். "அது என்ன சார், 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'? டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இப்பிடி ஒரு பேரு?" என்று கேட்பவர்களுக்கு சொல்லப்படும் கதை பதில். கொஞ்சம் கிறுக்குத்தனமான இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் கதையை சொல்லாமல் பீஸை கொடுக்கமாட்டேன் என்று முக்கால்வாசி பீஸை கொடுக்காமல் போய்விட்ட கிளையண்ட்டிடம் இருந்து மிச்ச பீஸை வாங்குவதற்கான முயற்சி.
திரையரங்கிற்குச் சென்றுத் திரைப்படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்ட நிலையில் நேற்று 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அது ஏதேனும் ஒரு OTT தளத்தில் வெளியாகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விடாமல் திரையரங்கிற்குச் சென்று பார்க்கத் தூண்டியது எதுவென்று யோசித்துப் பார்த்ததில் விடை ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை தற்செயலாய் பார்க்க நேர்ந்த நடிகர் கருணாஸின் பேட்டியாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. காமெடியனாகவும் அதன்பின் அரசியல்வாதியாகவும் அவரைப் பற்றி அறிந்ததுதான். அவரை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கும் கதை என்னவாக இருக்கும் என்ற ஒரு curiosity 'போகுமிடம் வெகு தூரமில்லை' ட்ரெய்லரைப் பார்க்கத் தூண்டியது. அது கொண்டு நிறுத்திய இடம் திரையரங்கம். இதற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டிருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்திற்கு. அதில் அதன் கதையும் தொட்டுக்காட்டப்பட்டிருக்கும். அமரர் ஊர்தி ஓட்டுநர் குமார் (விமல்) தன் மனைவியை பிரசவத்திற்காக தன் செலவுத் தகுதிக்கு மீறிய மருத்துவமனையில் தன் தாத்தாவின் பொறுப்பில் (இருவருக்கும் வேறு யாரும் இல்ல...
இரண்டு சித்திரை மாதம் , 1948 நேந்திரம்பட்டி . கிராமத்துக்கும் குக்கிராமத்துக்கும் இடையிலான ஒரு பட்டி . வெளியுலகத் தேவையோ தொடர்போ தேடாத ஊர் . இந்தியா சுதந்திரம் பெற்றதையே கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சேதி தெரிந்து , " நம்ம நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சிடுச்சாம்லய்யா ? ரொம்ப சந்தோசம் , சாமி " , என்று பேசிவிட்டு வயக்காட்டுக்குச் சென்ற மக்கள் வாழும் இடம் . வருடம் ஒரு முறை ( சில சமயம் அதுவும் இல்லாமல் ) அங்கே வரும் தெருக்கூத்துக்காரர்களும் , அவ்வப்போது நடக்கும் திருமணங்களும் , விழும் சாவுகளும் மட்டுமே நேந்திரம்பட்டியின் விசேஷங்கள் . அப்படிப்பட்ட ஊர் ஒன்றில் புதிதாய் ஒரு ஜட்கா வண்டி , அதுவும் மூட்டை முடிச்சுகளோடு வந்து நின்றால் அது எப்பேர்ப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் . பார்த்தாயிற்றா ? அந்தக் கற்பனையோடு இந்தக் காட்சியையும் இணைத்துக் கொள்ளுங்கள் . ஜல் ஜல் என்று ஊருக்குள் நுழைந்த ஜட்கா வண்டி ( வழக்கமாக மாட்டு வண்டியில் தான் சலங்கை கட்டியிருக்கும் . ஆனால...
கருத்துகள்
கருத்துரையிடுக