இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

படம்
  திரையரங்கிற்குச் சென்றுத் திரைப்படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்ட நிலையில் நேற்று 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அது ஏதேனும் ஒரு OTT தளத்தில் வெளியாகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விடாமல் திரையரங்கிற்குச் சென்று பார்க்கத் தூண்டியது எதுவென்று யோசித்துப் பார்த்ததில் விடை ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை தற்செயலாய் பார்க்க நேர்ந்த நடிகர் கருணாஸின் பேட்டியாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. காமெடியனாகவும் அதன்பின் அரசியல்வாதியாகவும் அவரைப் பற்றி அறிந்ததுதான். அவரை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கும் கதை என்னவாக இருக்கும் என்ற ஒரு curiosity  'போகுமிடம் வெகு தூரமில்லை' ட்ரெய்லரைப் பார்க்கத் தூண்டியது. அது கொண்டு நிறுத்திய இடம் திரையரங்கம். இதற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டிருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்திற்கு. அதில் அதன் கதையும் தொட்டுக்காட்டப்பட்டிருக்கும். அமரர் ஊர்தி ஓட்டுநர் குமார் (விமல்) தன் மனைவியை பிரசவத்திற்காக தன் செலவுத் தகுதிக்கு மீறிய மருத்துவமனையில் தன் தாத்தாவின் பொறுப்பில் (இருவருக்கும் வேறு யாரும் இல்ல...

உள்ளே/வெளியே

படம்
  Photo by Zachary DeBottis from Pexels ஜன்னல்களும் கதவுகளும் காப்பது உள்ளே உள்ளவற்றையா? வெளியே உள்ளவற்றையா? இரண்டும் தான் என்றால் - ஜன்னல்களும் கதவுகளும் எதற்கு சவப்பெட்டிகளுக்கு?

கண்ணாடியாகும் கண்கள் - நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (முத்துக் குளிக்க வாரியளா?)

படம்
  காவ்யா வெளியீடு பொதுவாகக் கவிதைகளை வாசிக்க ஏனோ மனம் விரும்பியதில்லை - புருவங்கள் கூட நரைத்த அந்த வயோதிகக் கவிஞனின் புகைப்படத்தை ஒரு புத்தகத்தின் அட்டையில் பார்க்கும் வரை. ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகத்தின் ஸ்டாலைக் கடந்து செல்லும் போது கால்கள் இடற வைத்தன, புகைப்படம் கூட மங்கச் செய்யாத அந்தக் கண்களின் ஒளி. "கண்ணாடியாகும் கண்கள்" புத்தகத்தைக் கையில் எடுத்த நொடியில் புரிந்தது எனக்கான கவிஞரும் கவிதையும் இதில் தான் என்று. முன் அட்டைப் பிரித்ததும் இதயம் ஒரு கணம் நின்று தொடர்ந்தது. பக்கம் முழுவதும் நிறைந்த கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தின் முகத்தில் அந்த ஐந்து வரி, ஏழு வார்த்தைக் கவிதை. பத்துப் பன்னிரண்டு வரிகளுக்கு மேல் எந்தக் கவிதையுமில்லை. ஆனால் ஒவ்வொரு கவிதைக்கும் மனம் அதிர்ந்து அடங்குகிறது - தனித்திருக்கும் பொழுது பின்னிருந்து 'பே...' என்றுக் கூச்சலிடும் குழந்தை நம்மைக் குலுங்கச் செய்வது போல். புகைப்படங்களேப் பக்கங்களாய், அச்சிட்டிருக்கும் கவிதை வரிகள் கவிஞனின் மனதில் இருந்துத் தெறித்து விழும் துணுக்குகளாய் - வழிந்தோடும் வார்த்தைகளாய் - எட்டிப் பார்க்க...

தாழ் இல்லா அறைகள்

படம்
  Photo by kilarov zaneit on Unsplash இரவு உணவிற்கு சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த நினைவு வந்தது. உருட்டிக்கொண்டிருந்த கைகள் ஒரு கணம் தடுமாறி பின்னர் அனிச்சையாய் தம் செயல் தொடர்ந்தன. இத்தனை வருடங்களாக - எத்தனை வருடங்கள்? கணக்கிட்டுப் பார்த்தால் பதினேழு வந்தது - இத்தனை வருடங்களாக வராத நினைவு, இப்போது இந்தக் கணம் ஏன்? இந்த நினைவின் இருப்பு இந்தக் கணம் வரை அறியாமல் போனது ஏன்? மனதின் எத்தனையாவது படிமத்தில் புதைந்து கிடந்தது இது? இந்தக் கணத்தின் எந்தச் சாவி இந்த ரகசிய அறையைத்  திறந்தது? அந்தச் சாவியைக் கண்டெடுத்தால் மீண்டும் அறையைப் பூட்ட முடியுமோ? பூட்டுக்கள் இல்லாத திறவுகோல்கள் கொண்ட விசித்திர அறைகளைத் தாழிடுவது எங்ஙனம்? “சப்பாத்திக்கு இன்னைக்கு என்னம்மா குருமா?” பத்து வயது மகனின் கேள்விக்கு, “ராஜ்மா”, என்ற ஒற்றை வார்த்தை பதில் கணவருக்கு வித்தியாசமாய்ப் பட்டிருக்கவேண்டும்… சமையலறையில் கை கழுவும் சாக்கில் என்னிடம், “என்னம்மா, உடம்பு சரியில்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, “தலைவலி”, என்ற ஒற்றை சொல்லே மீண்டும் பதிலாய் வந்தது. “நீ போய்த் தூங்கு. நான் பார்த்துக்கறேன்”, என்ற கணவர...

Tales from the Loop (பொதிந்திருக்கும் பவளங்கள்)

படம்
  TALES FROM THE LOOP புசுபுசுவென்று ஒரு பூனைக்குட்டி ஆழமாய் ஒரு தூக்கம் போட்டு, நீட்டி நிமிர்ந்து சோம்பல் முறித்து, பாலுக்காக நம் காலைச் சுற்றி, அதைக் கொடுக்கும் வரை நம்மை வேறு வேலை செய்ய விடாது, கொடுத்த பின்னும் நம் கவனம் நாடி, சோபாவில் அமர்வது போதாதென்று, நம் மடியில் வந்து சுருண்டு கொண்டு கதகதவென்ற ஒரு பஞ்சுப் பந்தாவது போல் தான் அமேசான் ப்ரைமின் “TALES FROM THE LOOP” தொடர். மெல்லிய ஒரு அழகுடன், ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி ஆரம்பிக்கும் இந்தத் தொடர், முடிவில் நினைவுகள் மறுபடி மறுபடித் தேடும் வெதுவெதுப்பானப் பூனைப் பொதியாகிறது. நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து, டைரிக் குறிப்புகளிலிருந்து, ஏன், கவிதைகளிலிருந்தும் கூடத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் எழுதப்படுவதும் படமாக்கப்படுவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் ஓவியங்களிலிருந்து ஒரு தொலைக்காட்சித் தொடர், கற்பனையில் புனையப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவது  “TALES FROM THE LOOP”ல் தான் முதல் முறையாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மெர்சர் என்ற ஊரில் "லூப்" என்று செல்லமாக அழைக்கப்படும் "Mercer Cent...

ஓசைகள்

படம்
Image by nonatickler from Pixabay   கேட்கும் திறன் இற்றுவிட்டால் ஓசைகள் அற்றுவிடுமா உலகம்?

சிறுபிள்ளைக் கையில் பொம்மை

படம்
Photo by Greg Rakozy on Unsplash வானம் அதுவாகத்தான் இருக்கிறது. மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், நீர், நிலம், காற்று, பூமி, உலகம், அண்டசராசரம்... அனைத்தும் அவைகளாகவேத்தான் இருக்கின்றன. பெயர் கொண்டு குறிப்பு வைத்துப் பார்ப்பது மனிதக்கண்கள் மட்டுமேயோ? நீரிடம் 'நீ குளம்' என்றேன்.  சுழித்து வழுக்கி வழிந்துப் பாய்ந்தது. காற்றிடம் 'நீ தென்றல்' என்றேன்.  சூறாவளியாய் சுழன்றடித்து ஊர் கலைத்துப் போனது. பறவையிடம் 'நீ புறா' என்றேன்.  அந்தரத்தில் பல்டியடித்து ‘Jonathan Livingston புறா’ ஆனது. நிலவிடம் 'நீ வெண்ணிலா' என்றேன்.  மறுநாள் செக்கச் சிவப்பாய் உதித்தது. சூரியனிடம் 'நீ சுடுவாய்' என்றேன்.  நண்பகலில் உறையும் பனியில் உடல் விறைத்தது. கண்கள் - மனம் - அறிவு - எதைக் கொண்டு அறிவது இவை அனைத்தையும்? எதைக் கொண்டுக் காணினும் முழுதாய் அறிய முடியுமா அதை எதையும்? அறிபவை அனைத்தும் கண்களின் வழி - புலன்களின் வழி - சொற்களின் வழி - மொழிகளின் வழி - அறிவின் வழி - தோற்றுவிக்கப்பட்ட பிம்பங்களைத் தானோ? அறிந்ததைக் கொண்டு அறியாததை அறிய முயலும் முயற்சி மட்டுமோ அத்த...

பார்வைகள்

படம்
  Photo by Bruno van der Kraan on Unsplash இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் போதும் கண்களை இடுக்கிக்கொள்கிறோம்; வெளிச்சத்திலிருந்து இருட்டிற்குச் செல்லும் போதும் கண்களை சுருக்கிக்கொள்கிறோம். கண்களைத் திறந்திருக்கும் வேளையிலேனும் எதையேனும் யாரையேனும் பார்க்கிறோமா?

உண்மைகள்/பொய்கள்

படம்
  Image by Panachai Pichatsiriporn from Pixabay உண்மைகள் உண்மைகளாய் இருப்பதனாலேயே சரியானவைகளாகிவிடுமா? பொய்கள் பொய்களாய் இருப்பதனாலேயே தவறானவைகளாகிவிடுமா?